![இரு மனம், இணைக்கும் திருமணம்'s image](/images/post_og.png)
வாழ்வது என்பது ஓர் கலை,
அதற்கு முழு அன்பே விலை,
உணர்ந்தால் இன்ப நிலை,
அன்புக்கு எல்லை இல்லை!
தனிமை தராது இனிமை,
இது உலகம் அறிந்த உண்மை,
காட்டாற்று வெள்ளம் ஆண்மை,
அணை பெண்ணின் மென்மை!
வாழ்வில் இணைந்த பின்பு,
பெண்ணின் கண் அம்பு,
பாய விளையும் அன்பு,
உடனே வந்திடும் தெம்பு!
இளமை மாறுது மாயமாய்,
துணை தேவை நியாயமாய்,
கன்னி கிடைப்பாள் தானமாய்,
மணக்கின்றனர் காலம் காலமாய்!
திருமணம் கடவுள் முடிவு,
அது தனிமைக்கு விடிவு,
பெண் சக்தியின் முழு வடிவு,
அவளால் வரும் துணிவு!
சொர்க்கத்தின் முடிவே திருமணங்கள்,
பூ மாலைகள் தரும் நறுமணங்கள்,
மகிழ்ச்சி அடையும் இரு மனங்கள்,
விட்டு அகன்றிடும் மன கனங்கள்!
இன்பம
Read More! Earn More! Learn More!