
பக்திமிக்க பூஜையறை காதலர்கள் பள்ளியறை
சக்தியோடு நாயகனார் தவம்புரியும் மேருமலை
அக்கரையும் இக்கரையும் அதன் நடுவே காவிரியும்
பக்குவமாய் ஓடுதல் போல் பயிலுகின்ற கல்வியறை
முற்றமது காமசுகம் முளைக்கின்ற பூமியல்ல;
மற்றுமொரு ஜீவனுக்கு வரவு சொல்ல வந்த இடம்
தம்பதிகள் உறவினிலே தாய்வயிற்றில் பிள்ளைவரம்
தாய்தகப்பன் குணம் போல சேய்க்குணம் தவழ்ந்துவரம்
ஆதலின் ஒன்றையொன்று
அநுசரித்துப் போவதுதான்
காதலிலும் இன்பம் வரும்
கண்மணிக்கும் நல்லகுணம்.
காதலில் மனைவியவள்
கருவடைந்த பின்னாலே
ஐந்துமா தம்வரைக்கும்
அழுவதென்ப தாகாது
அன்னை அழுதாலோ அலறியவள் துடித்தாலோ
அங்கம் பழுதுபட்டு அழகிழந்த பிள்ளைவரும்
கண்ணிரண்டும் கெட்டுவரும் கைகால் விளங்காது
வாய்மொழியும் தேறாது வாரிசுக்கும் உதவாது
எப்போதும் சிரித்தபடி இருக்கின்ற பெண்மயில்தான்
தப்பாமல் நல்ல தொரு தங்கமகன்(ள்) ஈன்றேடுப்பாள்
கணவன் அழகாக்க் கண்மணியை எதிர்பார்த்தால்
மனைவி மனம்நோகும் வார்த்தை சொல்லக் கூடாது.
அன்பு மொழிபேசி அரவணைத்து எந்நாளும்
தன்னையே மனைவியவள் சார்ந்திருக்கச் செய்து விட்டால்
பொன்னை வடித்த்துபோல் புத்திரர்கள் பிறப்பார்கள்!
கணந்தோறும் கணந்தோறும் கணவனையே நினைத்திருந்தால்
அவள் பெறும் ஓர் பிள்ளை என்றும் அப்பாவைப் போலிருக்கும்
ஆளான பின்னாலே ஆண்டாண்டு பொறுத்தவள்தான்
நாளாகி வயதாகி நல்லமனம் முடித்தவள் தான்.
ஆசை நிறைந்தாலும் அடக்கம் மிகுந்தவள்தான்
ஆனாலும் அந்த அழுகுமயில் வாழ்க்கையிலே
சூலான பின்னால்தான் சுகம்காணும் மயக்கம் வரும்.!
தேடும் மனையாளைத் திருப்தியுடன் வைத்திருந்தால்
கூடுகின்ற சந்ததியும் குணத்தோடு வந்துதிக்கம்.
மணவாழ்வு வாழுகையில் மறுவார்த்தை ஆகாது!
தாய்கொடுத்த சீர்வரிசை சகிக்கவில்லை! என்பதுவும்
ஜாடையாய்ப் பேசுவதும் தரம் குறைத்துக் காட்டுவதும்
அப்பன் கொடுத்த்தொரு ஆழாக்கு என்பதுவும்
வடுவாக நின்றுவிடும் வாழ்நாளில் ஆறாது
கொண்டவள்மேல் ஓர்பொழுது கோபம் வருமென்றால்
சண்டாளி சூர்ப்பனகை தாடகைநீ என்றெல்லாம்
அண்டாவில் அள்ளிவந்து அளந்துவைக்க்கூடாது
நாளைக்குப் பார்ப்போம், நடப்பதெல்லாம் நடக்கட்டும்
என்றே படுத்துவிட்டால் எழுந்திருக்கும் வேளையிலே
பெண்டாட்டி அன்புவரும் பெரிய நினைவு வரும்.
கடுகு அரிசியினைக் கற்தரையில் கொட்டிவிட்டால் மறுபடியும் திரும்பாது!
ஆழாக்கு அரிசியிட்டு அதில் வாழ்வு வாழ்ந்தாலும்
தாளாத காதலுடன் தாய்போல ஊட்டிவிட்டால்
தேவர் அமுதமெல்லாம் ‘சீ என்றே ஆகிவிடும்
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் மனசுதான் காரணமாம்
இன்பமென எண்ணிவிட்டால் எப்போதும் இன்பமயம்
துன்பமெனத் தோன்றினாலோ தொலையாத துன்பமயம்.
ராமனது துன்பம் இனி நமக்குவரப் போவதில்லை
சீதைபட்ட வேதனையைச் சிந்தித்தால் துன்பமில்லை!
ஆதாரம் ஒன்றையொன்று அண்டி நிற்க வேண்டுமென்றே
ஓர்தாரம் கொள்கின்றோம் உடனிருந்து வாழ்கின்றோம்.
சேதாரம் என்றாலும் சேர்ந்துவிட்ட பின்னாலே
காதோரம் அன்புசொல்லிக் கலந்திருந்தால் துன்பமில்லை!
குற்றமெல்லாம் பார்த்துக் குறை பேசத் தொடங்கிவிட்டால்
சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்ல்லை!
பற்றவைத்தால் வைத்த இடம் பம்பரம் போல் ஆடிவிடும்
தள்ளிவைத்தால் தங்கதும் தவிடாக மாறிவிடும்!
கையில் அரைக் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை
என்றிருக்கும் வேளையிலே இருப்பதையே பெரிதாக்கி
கொத்தாக்க் கீரைதனைக் கொழம்புவைத்துப் போட்டாலும்
சத்தமின்றிச் சாப்பிடுங்கள் தருவான் இறைவன்.
சண்டையிட்டு ஆவதென்ன சஞ்சலம்தான் மிஞ்சிவிடும்
அண்டை அயல்சிரிக்
Read More! Earn More! Learn More!
