ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு) காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் மானிட ஜாதியில் தனிமனிதன் நான் படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு) மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!